ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை: ஆவின் நிறுவனம் விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்க குறிப்பில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்.

The post ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை: ஆவின் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: