கடந்த மே 5-ல் ஒரு கிராம் ரூ.5775க்கு விற்கப்பட்டதே அதிகபட்ச விலையாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் ரூ.5780-ஆக உயர்ந்தது. சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்கிறது. தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என்று நகை வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்ததே முக்கிய காரணமாக உள்ளது. மேலும், 3 மாதம் வரை தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
The post அதிர்ச்சியில் பொதுமக்கள்: ரூ.47,000-ஐ எட்டும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.