அப்போது, சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் ரியாஸ் அகமது, இ.பாலமுருகன் ஆஜராகினர். அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது. அதற்காக ஏன் இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். எம்பியாக உள்ள ஒருவர், முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கைத்தட்டல்களுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அவர் பேசியதை உங்களால் கூட படிக்க முடியாது. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
The post கைதட்டலை பெற எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.