வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் வேலை பார்த்து வருகின்றோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நெல்லை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்த்து வருகின்றோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பாதித்துள்ளன என்று அவர் கூறினார்.

The post வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் வேலை பார்த்து வருகின்றோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: