மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டையில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இதனால் மீனவர்களின் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைப்பிடித்தல், படகுகளை பறிமுதல் செய்தல், மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்துதல் போன்ற அராஜகச் செயல்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபடுவது நிறுத்தப்பட வேண்டும். எனவே ஒன்றிய அரசு கண்டிப்புடன் இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

The post மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: