அனைத்து தரப்பு வாதங்களுக்கும் பின் மனு மீது உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.பட்டாசு ஆலை விபத்துக்கு உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடுகிறோம். பாதித்த குடும்பங்களுக்கு அரசுப் பணி, விதவை ஓய்வூதியம் மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும். ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம் உள்ளிட்ட விதிகளை கடுமையாக பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி, வெடி பொருள் சட்டம் உள்ளிட்ட விதிகளையும் அரசு முறையாக பின்பற்ற வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.
The post பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.
