பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் தங்களுக்கு லைசென்ஸ் பெறவும், டெஸ்டிங் செல்லவும் சனிக்கிழமை வசதியாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறை கமிஷனர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிக லைசென்ஸ்கள் கேட்டு விண்ணப்பங்கள் வரப்பெற்றால், டெஸ்டிங் பணிகள் நடத்திடும் வகையில் சனிக்கிழமைகளிலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றலாம்.
ஆனால் அதற்காக மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து, அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகை செய்தி முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும். ஏனெனில் அந்த சனிக்கிழமைகளில் டிரைவிங் லைசென்ஸ் கேட்டு காத்திருப்போர் பயன் அடையும் வகையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணிகள் இருக்க வேண்டும். ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு சாதகமாக எவ்விதத்திலும் சனிக்கிழமை வேலைநாளை பயன்படுத்த கூடாது. மண்டல போக்குவரத்து அலுவலர்கள் இதை உன்னிப்பாக கண்காணித்திட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டிரைவிங் லைசென்ஸ் கேட்டு அதிக விண்ணப்பம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கலாம்: போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.