திருச்சியில் இன்று நடைபெற இருந்த ஜே.பி.நட்டா ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு

திருச்சி: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. பாஜ தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்ய உள்ளனர். அந்த வகையில் கட்சியின் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருச்சி மக்களவை தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ய திருச்சி வருகிறார்.

திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை இன்று (7ம் தேதி) ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் பாஜ சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு மாநகர காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. இது பாஜ மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருச்சியில் இன்று நடைபெற இருந்த ஜே.பி.நட்டா ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: