டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த ஜோ பைடன், டிரம்ப் அளவுக்கு அதிகமாக பொய் பேசுகிறார். அவர் தேர்தலில் தோல்வி அடைவார்’’ என்றார். டிரம்ப் பேசுகையில் ‘‘ஜோ பைடனை ஒரு கிரிமினல்’’ என்றார். ‘‘ஜோ பைடன் டிரம்பை தண்டனை பெற்ற குற்றவாளி’ என கூறினார். இந்த விவாதம் தொடர்பாக அமெரிக்க வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 67 சதவீதத்தினர் விவாதத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். விவாதத்தின் போது, டிரம்பின் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பைடன் தடுமாறியது அவரது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.பைடனுக்கு பதிலாக வேறொருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
The post அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி appeared first on Dinakaran.