கடந்த 18ம் தேதி உரிமை குழுவின் முன் நேரில் ஆஜராகிய ஆதிர் யாருடைய மன உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் அல்ல என்றும் குறிப்பிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதிர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,நேற்று நடந்த உரிமைக்குழு கூட்டத்தில் ஆதிர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.
The post காங். எம்பி ஆதிர் சஸ்பெண்ட் ரத்து appeared first on Dinakaran.