இந்நிலையில் பெரியார் சிலை மீது மாட்டுச்சாணம் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெரியார் சிலையை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை அடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கோவை மாவட்டம் வடசித்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.