சுங்குவார்சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சுங்குவார்சத்திரம் அருகே எச்சூரில் புதிய தொழிற்சாலை தொடங்குவதற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தொழிற்சாலைக்கு கிராவல் மண் வினியோகம் செய்யும் ஒப்பந்தத்தை அதே பகுதியைச் சேர்ந்தவர் பெற்றுள்ளார். இந்நிலையில், ஒப்பந்த பணியை தங்களுக்கு வழங்க வலியுறுத்தி தொழிற்சாலை நிர்வாகத்தினரை 5 பேர் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து, ஒப்பந்த பணி கேட்டு மிரட்டிய ஆல்பர்ட், சூர்யா, சைமன், ஜெயசீலன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஆல்பர்ட், அவரது ஆதரவாளரை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சுங்குவார்சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: