இதுகுறித்து கருப்பையா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்,போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த வீரசெல்வன் (21), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20), மாதவன் (21) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் ஐஸ் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 3 கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.
The post கோயம்பேடு காவல் நிலையம் அருகே வியாபாரியை தாக்கி வழிப்பறி 3 கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.