கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இரவு நேரங்களில் வீடுகளில் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் கால்வாயில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளதால் தங்குதடையின்றி தண்ணீர் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடைந்து வருகிறது. இதுதொடர்பாக செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் குடிநீரில் மாசு ஏற்பட்டு புழல் ஏரி நீரும் மாசடைய வாய்ப்புள்ளது. எனவே, கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுக்கவேண்டும், அதிகளவில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.