என்டிஆர்எப் வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் உயிர்களைக் காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன் என தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு ட்விட்டரில் முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post என்டிஆர்எப் வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: