அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று லாரிகளை மடக்கி பிடித்தனர். மேலும், லாரி டிரைவர்களிடம் விசாரித்தனர். அதில், சென்னையில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த நவாஸ்கான் (28), அப்பாஸ் மந்திரி (51), உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (31), மாரியப்பன் (52) மற்றும் ராம் (21) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட 44 மாடுகளையும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள தேவந்தவாக்கம் பகுதியில் உள்ள கோகுலகிருஷ்ணா கோ சாலையில் ஒப்படைத்தனர்.
The post சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.