இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதேபோல், திருச்சி சர்வதேச விமான நிலைய முக்கிய அதிகாரிகளின் இமெயில் ஐடிக்கு நேற்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. அந்த இமெயிலில், விமான நிலையம் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 மணிநேரம் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
The post கோவை, திருச்சியில் பரபரப்பு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
