சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய மக்கள் தங்கள் அரசை நம்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது சாத்தியம் ஆவதற்கு இந்திய மக்களே காரணம். நாம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தால் அது நமது பலத்தை அதிகரிக்கும். லோக்மான்ய திலகர் பத்திரிகை சுதந்திரம் பற்றி நன்கு உணர்ந்திருந்தார். சுதந்திர போராட்டதின் போக்கையே மாற்றியவர் திலகர். தெருக்களுக்கு சூட்டப்பட்ட வெளிநாட்டவர்களின் பெயரை மாற்றிவிட்டு இந்தியர்களின் பெயர்களை சூட்டினால் சிலருக்கு சங்கடம் ஏற்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடி லோக்மான்ய திலகர். இவ்வாறு பிரதமர் கூறினார். விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
The post ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தால் பலம் அதிகரிக்கும்: லோகமான்ய திலகர் விருது விழாவில் பிரதமர் பேச்சு appeared first on Dinakaran.