இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அவரது தங்கும் விடுதியில் இருந்த பாஸ்கரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது, அந்த வாகனத்தின் முன் ஆர்த்தி அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினர். உடனே போலீசார், தர்ணா செய்த ஆர்த்தியை இழுத்து அப்புறப்படுத்தி விட்டு, வாகனத்தை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தன்னையும், குழந்தைகளையும் சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கணவர் பாஸ்கர் மீதுஆர்த்தி சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post மனைவி, குழந்தைகள் சித்ரவதை அமெரிக்க இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.