அந்த போர்டுகளை அகற்றவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அண்ணாநகர் சென்னை மாநகராட்சி 8வது மண்டல அலுவலர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் போர்டை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வந்து டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழி என்று வைக்கப்பட்டிருந்த போர்டை அகற்றினர். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
The post பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைந்தகரை பஸ் ஸ்டாப்பில் டாஸ்மாக் போர்டு அகற்றம் appeared first on Dinakaran.
