பின்னர் கடந்த 12.3.21ல் பூசாரி பாபு, அமாவாசை தினத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து பரிகார பூஜை செய்தார். அப்போது பெண்ணின் பெற்றோரை அறையிலிருந்து வெளியேறும்படி கூறிவிட்டு, தனியாக இருந்த பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்தால்தான் தோஷம் விலகும் என கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் இறந்து விடுவாய் என்று மிரட்டி, கற்பூரம் ஏற்றி சத்தியமும் வாங்கியுள்ளார்.
இதன் பின்னர் மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டு பெற்றோர் விசாரித்தபோது, பரிகார பூஜையின்போது பூசாரி பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து பூசாரி பாபுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நந்தினிதேவி விசாரித்து, பூசாரி பாபுவிற்கு 10 ஆண்டு சிறையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
The post அமாவாசை நாளில் பரிகார பூஜை நடத்தி பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 10 ஆண்டு சிறை: கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.