கதிரவனை கைது செய்த போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 2 பேர் குடிபோதையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி சஞ்சய் நகரைச் சேர்ந்த மதன்குமார் (19) மற்றும் வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர், ஹவுசிங் போர்டைச் சேர்ந்த தயால்ராஜ் (24) என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
The post வழிப்பறி செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.