பின்னர், கத்தி முனையில் காய்த்ரியை மிரட்டி 5 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச் சென்றார். இதுகுறித்து காயத்ரி ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு எஸ்ஐ ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் 5 சவரன் நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மாங்காடு பகுதியைச் சேர்ந்த மாபாட்ஷா(38) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். 5 சவரன் நகைகள் மற்றும் ஒரு பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆவடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 5 சவரன் நகையை கொள்ளையடித்தவர் கைது appeared first on Dinakaran.