போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காசிமேஜர்புரத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் திருப்பதி (28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது வள்ளிநாயகம் வீடு உள்பட 7 இடங்களில் கைவரிசை காட்டியதை திருப்பதி ஒப்புக்கொண்டார்.காசிமேஜர்புரத்தை சேர்ந்த ராஜா வீட்டில் 26 கிராம், திருமலைக்குமார் வீட்டில் 45 கிராம், மேலகரம் அப்பாத்துரை வீட்டில் 76 கிராம் மற்றும் காசிமேஜர்புரம் சரவணன் வீடு உள்பட 7 வீடுகளில் திருடிய 263 கிராம் தங்க நகைகள், சுமார் 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட திருப்பதி, குற்றாலத்தில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆளில்லாத வீடுகளில் கைவரிசை: ஓட்டல் உரிமையாளர் கைது.! 263 கிராம் நகை மீட்பு appeared first on Dinakaran.
