முதல்வர் கோைவ வருகை

கோவை, டிச.3: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 6.30 மணிக்கு விமானம் மூலமாக சென்னையில் இருந்து கோவை வந்தார். அவருக்கு தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட கலெக்டர் ராசாமணி, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தர். முதல்வர் வருகையை முன்னிட்டு பீளமேடு விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி ரோட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் காரில் சேலம் புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: