கடலூர், டிச. 1: கடலூர் துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் நிவர் புயலாக உருமாறி கடலூர்- மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில் கன்னியாகுமரிக்கு வடகிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கை தொடர்பான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.