மன்னார்குடி, நவ. 30: தமிழ்நாடு கோயில் பூசாரிகள் சங்க மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கை: பூசாரிகளுக்கு மாத ஊதியம் பணிப் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோயில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் 2019ல் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருகால பூஜை மற்றும் இலாகா கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலில் சேராத திருக்கோவிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம், பணிப்பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் 2019 மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மாத ஊதியம், பணி பாதுகாப்பு, பொங்கல் கருணை கொடை உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆணையர் இக்கோரிக்கையினை ஏற்று விரைவில் நடைமுறை படுத்துவதாக தெரிவித்த நிலையில், 8.11.2019ம் தேதி இலாகா கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் ஒருகால பூஜை நடைபெறும் திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரி களுக்கு அடையாள அட்டை மட்டும் வழங்க உத்தரவிட்டார்.