நாமக்கல், நவ.30: நாமக்கல் அருகே தனிமையில் இருந்தபோது, காதலன் கண் முன் காதலி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவுக்கு காரணமான காதலன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் அருகே சின்னமுதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகள் நித்யாஸ்ரீ(18). இவர், கடந்த ஆண்டு ரெட்டிப்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 படித்தார். அப்போது, உடன் படித்து வந்த எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்த மாணவருடன் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை பெருமாப்பட்டி பகுதியில், மறைவான இடத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சிலர் நடந்து வருவது போல சப்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. வேகமாக ஓடியதில் கால் இடறி, அருகில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் காதலி தவறி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த காதலன், சப்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.