செங்குந்தர் மகாஜன சங்க முப்பெரும் விழா

குமாரபாளையம், மே 1: குமாரபாளையம் நகர செங்குந்தர் மகாஜன சங்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன், செங்குந்தர் சங்க தலைவர்கள் நாச்சிமுத்து, சபாபதி ஆகியோரின் பிறந்தநாள் விழா, முப்பெரும் விழாவாக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். தில்லையாடி வள்ளியம்மை மகளிர் பேரவை தலைவர் அறிவுக்கொடி வரவேற்றார். முன்னாள் நாட்டாண்மைக்காரர் நந்தகுமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். தலைவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. கிளைச்சங்க செயலாளர் சித்தலிங்கம், நகர சங்க நிர்வாகிகள் மகேந்திரன், பிரபு, நடராஜன், சண்முகம், முருகேசன், குருமூர்த்தி, கணேசன், ரங்கநாதன், மாணிக்கம் கலந்து கொண்டனர். கிளைச்சங்க தலைவர் வேலுசாமி நன்றி கூறினார்.

The post செங்குந்தர் மகாஜன சங்க முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: