மாநில அளவிலான கைப்பந்து போட்டி

ராசிபுரம், ஏப்.30: ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பேரூராட்சியில், கைப்பந்து கழகம் சார்பில் 24ம் ஆண்டாக ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி, 2 நாட்களாக நடைபெற்றது. இதில் சென்னை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். பெண்கள் அணியின் இறுதிப் போட்டியில், சேலம் அணியை வீழ்த்தி, கோபிசெட்டிபாளையம் அணி வெற்றி பெற்றது. இதே போல், ஆண்கள் பிரிவில் சேலம் அணியை வீழ்த்தி, பட்டணம் பார்க்கவன் அணி வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவில், பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் நல்லதம்பி மாணிக்கம், நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழக துணைச்செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளைக்கு பரிசுகளை வழங்கினர்.

The post மாநில அளவிலான கைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: