காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்

பரமத்திவேலூர், ஏப்.30: பரமத்திவேலூர் காவல் துறை சார்பில், புகார் மனுக்கள் மீதான குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. பரமத்திவேலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமை வகித்தார். வேலூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். வேலூர் காவல் நிலையங்களில் நிலுவையிலிருந்த குடும்ப பிரச்னை, இடப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 15 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2 மனுக்கள் மீது, உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், வயதானோர் அளித்த புகார் மனுக்கள் மீது நேரடியாக சென்று விசாரிக்கப்பட்டது. முகாமில் எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: