தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்

பள்ளிபாளையம், ஏப்.30: மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்ற தனிப்பிரிவு காவலரின் குழந்தைகள் தங்கம் வென்றனர். வெப்படை காவல் நிலையத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் பிரவின். இவரது மனைவி வனிதாமணி. குமாரபாளையம் போக்குவரத்து காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் லயா, மகன் கிருத்திக் இருவரும் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில வில்வித்தை போட்டியில் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றனர். இதில், லியா தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், டார்கெட் / அணிமல் ஆகிய இரண்டு பிரிவுகளில் பங்கேற்ற கிருத்திக், இரண்டிலும் தங்கப் பதக்கம் பெற்றார். பதக்கம் பெற்ற குழந்தைகளை காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: