ஆர்.எஸ்.மங்கலம், நவ.24: திருப்பாலைக்குடியில் ரேசன் கடைக்கு தனி கட்டிடம் இல்லாததால் அங்குள்ள விவசாயிகள் நல சங்க கட்டிடத்தில் கடை இயங்கி வருகின்றது. இதனை விவசாய சங்கத்தினர் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் உள்ள கடை எண் 1 என்ற ரேசன் கடை மூலம் பழங்கோட்டை, மந்தனார்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடை ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து அங்குள்ள ரேசன் பொருட்களை பாதுகாக்கும் விதமாக திருப்பாலைக்குடி விவசாய சங்க கட்டி
டத்தில் வைத்து பயனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.