பெரம்பலூர், நவ. 22: பெரம்பலூர் சர்க்கரை ஆலை 43-வது முன்மாதிரி பேரவைக் கூட்டம் நேற்று சர்க்கரை ஆலை கூட்ட அரங்கில் பொதுமேலாளர் விஜயா தலைமையில் நடைபெற்றது. ஆலை நிர்மச் செயலாளர், தலைமை ரசாயணர் தலைமை நிர்வாகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது, 2015-2016, 2016-2017 ம் ஆண்டுக்கு தமிழக அரசு தரவேண்டிய (SAB ) பாக்கிதொகை ரூ.33 கோடியில் டிசம்பர் மாதத்தில் ரூ.11 கோடியே 90 லட்சமும், பிப்ரவரி மாதத்தில் பாக்கி தொகையையும் கொடுக்க உள்ளதாக அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு திருப்தி இல்லாததால் டிசம்பர் 31க்குள் விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கி தொகை முழுவதையும் தரவேண்டும் என கோரி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.