கொடுத்த பணத்தை திருப்பி தராதவரின் பைக்கினை எரித்த மூவருக்கு வலை

 

பெரம்பலூர்,ஏப்.29: மாவிலிங்கை கிராமத்தில் கொடுத்தப் பணத்தைத் திருப்பித் தராதவரின் பைக்கினை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை மிரட்டல் விடுத்ததால் பர பரப்பு ஏற்பட்டது. மூவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவிலிங்கை கிராமத்தில் கடந்த 27ஆம்தேதி இரவு 10.30 மணியளவில் அடை யாளம் தெரிந்த, பெயர் விலாசம்தெரியாத, காரில் வந்த மூன்று நபர்கள், கலைச்செல்வன் என்பவர் கொடுக்க வேண்டிய பணத்தை பலமுறை கேட் டும் கொடுக்காததால் ஏற் பட்ட முன் விரோதத்தில் கலைச்செல்வன் வீட்டின் முன்பிருந்த பைக்கினை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தும், வீட்டில் இருந்த நபர்களை இரும்பு கம்பியைக் காட்டி மிரட்டிச்சென்றதாக கலைச்‌செல்வனின் மனைவி சூரியா(32) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பைக்கினை எரித்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்ற மூவரும் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. இதற்காக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் மங்கள மேடு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மூவரையும் தேடும்படி முடுக்கி விடப்பட்டுள்ளது.

The post கொடுத்த பணத்தை திருப்பி தராதவரின் பைக்கினை எரித்த மூவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: