சேந்தமங்கலம், நவ.21: சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரத்தில் ஓடும் வரட்டாற்றின் மையப்பகுதியில் இருந்து, 3 திறந்தவெளி கிணறுகள் அமைத்து, சேந்தமங்கலம் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் இருந்து சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதி, சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெண்டாங்கி கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் புதூர் செல்லும் வழியில் மூன்று சாலை பிரிவு உள்ளது. அங்கு சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக தண்ணீர் கசிந்து, வெளியேறி வீணாகி வருகிறது.