பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 90% தேர்ச்சி

பள்ளிபாளையம், மே 7: பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயின்ற 274 மாணவிகள், நடப்பாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வெழுதிய 247 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 90 சதமாகும். கலைப்பிரிவு மாணவி லோகேஸ்வரி 565 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். 551 மதிப்பெண்களுடன் மோனிகா 2ம் இடம், 545 மதிப்பெண்களுடன் இலக்கியா 3ம் இடம் பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகரன், மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 90% தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: