பெரம்பலூர், நவ.21:பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி முருகம்பாள் (27). கடந்த 12 ஆண் டுகளுக்கு முன்பு, இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட னர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் கண்ணன், முருகம்பாள் ஆகிய இருவருக்கு மிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் தன து மனைவி முருகம்பாளை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி யுள்ளார்.