குளத்தூர், நவ. 12: குளத்தூர் அருகே இ.வேலாயுதபுரம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பட்டாணி மகன் கார்த்தி (22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்குமார் (19) என்பவரும் தருவைகுளத்தில் மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். வழக்கம்போல் தொழிலுக்காக நேற்று இரவு 8 மணிக்கு இருவரும் ஒரே பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தருவைகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். இ.வேலாயுதபுரம் கிராமம் அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த கார், இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.