பைக் திருடர்கள் 2 பேர் கைது

கோவை, நவ.12: கோவை துடியலூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். இவர்கள் வந்த பைக் இடையர்பாளையம் காந்திநகரை சேர்ந்த சரவணகுமார் (26) என்ற தனியார் நிறுவன ஊழியருக்கு சொந்தமானது எனவும், இவர்கள் திருடி தப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த தங்கமணி (27), சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த மணி (28) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணி கார் டிரைவராகவும், தங்கமணி கூலி வேலையும் செய்து வந்தனர்.

Related Stories: