கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ்

 

கோவை, மே 5: ஊட்டியில் வரும் 10ம் தேதி மலர்கண்காட்சி தொடங்குகிறது. இதன்காரணமாக ஊட்டிக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்லும் தமிழக பயணிகள் கோவை வந்து செல்ல வேண்டும். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு அதிகளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து இ-பாஸ் கிடைக்காத பொதுமக்கள் கோவை வரை காரில் வந்து விட்டு பின்னர் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து தற்போது இயக்கப்படும் அரசு பஸ்களை விட கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது. கோவையில் இருந்து ஊட்டிக்கு கூடுதலாக 20 பஸ்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 20 பஸ்கள் என மொத்தம் 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

The post கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.