ஆத்தூர், நவ.11: ஆத்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.