இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தம்

ஜலகண்டாபுரம், ஏப். 20: இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் எண்-86 ல் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 25 வாக்குகள் பதிவான நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. வேலை செய்யாததால் 7:40 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் அலுவலர்கள் இயந்திரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து 8:20 மணிக்கு வாகுப்பதிவு மீண்டும் தொடங்கியது. அதேபோல், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் வாக்கு பதிவு மாதிரி முடிக்கப்பட்ட நிலையில் இயந்திரம் பழுதடைந்தது. இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு தடைப்படட்த. இதுகுறித்து வாக்குச்சாவடி ஜோனல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் வாக்குச்சாவடிக்கு விரைந்து வந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்தனர். 40 நிமிட தாமததத்துக்கு பின் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

The post இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: