கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபருக்கு வலை

சேலம், ஏப்.18: சேலம் பள்ளப்பட்டி ஜவகர் மில் பகுதியை சேர்ந்தவர் முரளி (48). இவர் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வேகமாக முரளி மீது மோதுவது போன்று வந்த வாலிபர், திடீரென கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் சட்டை பையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். இதுபற்றி முரளி பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், முரளியிடம் பணத்தை பறித்தது சின்னேரி வயக்காட்டை சேர்ந்த பாண்டியன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: