குட்கா விற்றவர் கைது

தாரமங்கலம், ஏப்.24: தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது குறித்து தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நங்கவள்ளி மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையில் குட்கா விற்பனை செய்து வருவதாக, தாரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மளிகை கடையில் சோதனை செய்தபோது, சுமார் ₹15ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான செந்தில்குமார்(45) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: