ஆர்எஸ். மங்கலம், நவ. 5: ஆர்எஸ். மங்கலம் அருகே குறைந்த மின்னழுத்த சப்ளையால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆர்எஸ். மங்கலம் அருகே சாத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட மொன்னார்கோட்டை, விருதன்வயல் உள்ளிட்ட கிராமங்களுக்கு வளனை, எலிக்குளம் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்ம் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர்களில் மின்திறனுக்கு ஏற்றார்போல் மின்இணைப்பு வழங்காமல் கூடுதல் கிராமங்களையும் இணைத்து மின்சப்ளை செய்து வருகின்றனர். இதனால் மொன்னார்கோட்டை, விருதன்வயல் பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.