பெரம்பலூர், நவ. 5: பெரம்பலூரில் ரூ.2.53 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாலுகா அலுவலக புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பெரம்பலூரில் ரூ.2.53கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதைதொடர்ந்து பெரம்பலூர் கலெக்டர் வெ ங்கட பிரியா, எம்எல்ஏக்கள் (பெரம்பலூர்) இளம்பை தமிழ்ச்செல்வன், (குன்னம்) ராமச்சந்திரன் ஆகியோர் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.