கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11ம்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பூஜைகளை செண்பக ராமன், ரகு, கணேஷ் பட்டர் முன்னின்று நடத்தினர். வரும் 11ம்தேதி வரை நடைபெறும் திருவிழாவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உள்வீதியுலா இடம்பெறும். இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்பர். பூஜை நேரங்களில் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. வரும் 11ம்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.