கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டியில் ஏஐடியுசி நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. பஞ்சாலை தொழிற்சங்க ஜீவா இல்லம் முன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன் தலைமையில் நடந்த இவ்விழாவில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஏஐடியுசி கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பது தான் அரசமைப்பின் அடிப்படை திட்டம். இந்த திட்டத்தை மறுக்கவோ, மாற்றோ வரக்கூடாது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னரே திமுக கூட்டணியில் எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.