பட்டிவீரன்பட்டி, நவ. 1: திண்டுக்கல் மாவட்டம் தேவரப்பன்பட்டி ஊராட்சியில் உள்ள வினோபாஜி நகரில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைகுடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜையும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்ட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் பிளாடிக் தொட்டி துவக்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் பணி எதுவாக இருந்தாலும் அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தும் கட்சி தான் திமு.க. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது. மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அவருக்கு அதிகரித்து வருகிறது.